×

திருச்சி அருகே கிணற்றில் விழுந்த காளை மீட்பு

திருச்சி, டிச.30: திருச்சி அருகே கிணற்றில் விழுந்த காளை கயிறு கட்டி மீட்கப்பட்டது. திருச்சி குண்டூர் ஆலத்தூரை சேர்ந்தவர் கபில்ராஜ். இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காளைக்கு பயிற்சி கொடுத்துவிட்டு அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கட்டியிருந்தார். அப்போது அங்கு வந்த கோயில் காளை, இந்த காளையுடன் சண்டையிட்டதில் பாய்ந்து கபில்ராஜ் தோட்டத்தில் உள்ள 20அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துவிட்டது. தகவலறிந்த திருச்சி தீயணைப்பு வீரர் மெல்கிராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று காளையை மீட்கமுயன்றனர். அப்போது காளை முட்ட வந்ததால் கபில்ராஜ் மூலம் காளையை கயிறு கட்டி மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

Tags : Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...