திருச்சி, டிச.30: திருச்சி மாவட்ட ஒய்வூதியர்கள் சங்க மாதாந்திர செயற்குழு மற்றும் மண்டல கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசினை சி மற்றும் டி வகுப்பிற்கு மட்டும் என்பதை விலக்கி எல்லா ஓய்தியர்களுக்கும் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பண்டிகை முன் பணம் வழங்க வேண்டும். அரசு, முதியோர்கள், பேருந்துகளில் பயணம் செய்ய கொடுத்த சலுகையை எல்லா மாவட்டத்திற்கும் விரிவுப்படுத்தி உத்தரவிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி உதவி குடும்ப ஓய்வூதியர்களுக்கு பெறும் வகையில் அரசு ஆணை வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட சங்க தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.