×

கெங்கவல்லி பகுதியில் பருத்தியில் நோய் தாக்குதல் விவசாயிகள் கண்ணீர்

கெங்கவல்லி, டிச.30: கெங்கவல்லி பகுதியில் பருத்தி செடியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம்ஹெக்டேர் பரப்பளவில் நடப்பு பருவத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி நன்கு வளர்ந்து பூ பிடித்து காய் காய்த்து அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், தற்சமயம் செடிகளில் சாம்பல் நோய் தாக்கம் அதிகமாக பரவி வருவதாக விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர். இந்த நோய்தாக்குதலுக்குள்ளான செடிகள், இலைகள மற்றும் சபைகள் உதிர்ந்து மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இதுவரையிலும் 5 முறைக்கு மேல் மருந்து அடித்து, 3 முறைக்கு மேல் உரம் வைத்து விட்டோம். ஆனால், அறுவடைக்கு தயாராகி உள்ளஇந்தவேளையில் சாம்பல் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும். நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டால் அதனை சரிக்கட்டும் வகையில்அரசு உரிய இழப்பீடு வழங்கிடும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : cotton swab farmers ,area ,Kengavalli ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு