×

ராசிபுரம் நகரில் முடிவடையாத பாதாள சாக்கடை திட்ட பணிகள்


ராசிபுரம், டிச.30:ராசிபுரம் நகராட்சி பகுதியில், ₹58 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக  நடந்து வருகிறது. இந்த திட்டம் தொடங்கியது முதல், பிரதான சாலைகள் முதல் சிறு தெருக்கள் வரை குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இணைப்புக்கு அதிக டெபாசிட் செலுத்த வேண்டி இருப்பதால், பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற தயக்கம் காட்டினர். இந்நிலையில், பணிகள் முடிவடையாத ராசிபுரம் கண்ணையா தெருவில் பாதாள சாக்கடையின் மூடி வெளியே தெரிந்தும், பழுதாகியும் கிடக்கிறது. இதனால், கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பாதாள சாக்கடை திட்ட பணிகள்  முழுமையடையவில்லை. கழிவுநீர் கசிவது குறித்து ஆய்வு செய்யப்படும்,’ என்றனர்.

Tags :
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு