×

உலக நன்மைக்காக மூல மந்திர யாகம்

நாமக்கல், டிச.30:  நாமக்கல்லில் லஷ்மி நரசிம்ம பக்தஜன சபா சார்பில் உலக நன்மைக்காக, மூல மந்திர யாகம் நேற்று நடைபெற்றது. லஷ்மி நரசிம்மர் மூல மந்திரம் 10 ஆயிரத்து 8 முறை ஜபித்து யாகம் நடைபெற்றது. யாகத்தை சுரேஷ், சந்தோஷ் பட்டாச்சார்யார் குழுவினர் நடத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ரங்கம் விஸ்வ பிரம்மா யஜூர் வேத பாடசாலை சார்பில், ஸ்ரீரங்கம் காவிரி கரையில் கட்டப்பட்டு வரும் பிரம்மா யஜூர் வேத பாடசாலை கட்டிடத்திற்கு ₹10 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

Tags : world ,
× RELATED சில்லி பாயின்ட்…