×

நாகை அருகே பஸ் மோதி மின்கம்பம் சேதம்

நாகை, டிச.30: நாகை அருகே தனியார் பஸ் மோதியதில் மின்கம்பம் சேதம் ஏற்பட்டது. காரைக்காலில் இருந்து கோவை செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று இரவு நாகை வந்தது. வேளாங்கண்ணியில் நிற்கும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக புத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்றது. அப்போது பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி வந்து சாலையில் இருந்த உயர் மின் அழுத்த கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் சேதம் ஏற்படாமல் உயிர்தப்பினர். பஸ் மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைந்தன. இதனால் சிக்கல், மஞ்சக்கொல்லை, ஒரத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.

Tags : bus collision ,Naga ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...