×

குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம், டிச.30: நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தொலைபேசி நிலையம் அருகில் உள்ள சாமியார் குட்டையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் மிதந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று குட்டையில் மிதந்தஉடலை கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து கிராமநிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குபதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Recovery ,pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...