×

படித்துறை விசுவநாதர் கோயிலில் தேவார தொடர் சொற்பொழிவு

மயிலாடுதுறை, டிச.30: நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் ஆகியவை இணைந்து மயிலாடுதுறை படித்துறை விசுவநாதர் கோயிலில் தேவார மூன்றாம் அமர்வு தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. மூன்றாம் அமர்வு சொற்பொழிவில் பேராசிரியர் சாமி கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். தேவாரம் பற்றியும், பன்னிரு திருமுறைகள் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம. சேயோன் மற்றும் படித்துறை விஸ்வநாதர் கோயில் குருக்கள் குமார் சிவாச்சாரியார் மற்றும் குகன் சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்

Tags : Thevara ,Padiyatara Vishwanath Temple ,
× RELATED தெய்வீகத் தேவாரமும் திருத்தைப்பூசமும்