×

ஓசூர் அரசு கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஓசூர், டிச.30:ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் உள்ள வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் ஒன்றியத்தில், கடந்த 27ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. முதல்கட்ட தேர்தலில், 81 ஆயிரத்து 938 வாக்காளர்கள் வாக்களித்ததில், 79.81 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் 184 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பெட்டிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றை இரு அறைகளில் பாதுகாப்பாக வைத்த அதிகாரிகள் ஓசூர் ஆர்டிஓ குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆப்தாப்பேகம் ஆகியோர் முன்னிலையில் சீல் வைத்தனர். ஓசூர் டிஎஸ்பி சங்கு தலைமையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகளுக்கு. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

Tags : Hosur Government College ,
× RELATED ஓசூர் அரசு கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு