×

தேசிய போட்டிக்கு தேர்வான கபடி வீரருக்கு எம்எல்ஏ நிதியுதவி

தேன்கனிக்கோட்டை, டிச.30: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டை ஊராட்சி, மேலபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மகன் பிரவீன்குமார்(17). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் அக்ரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கபாடி வீரரான பிரவீன்குமார், கடந்த 2018ம் ஆண்டு ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் யூத் கேம்ஸ் ஆப் இந்தியா டீம் சார்பில், நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், நேபாளம் செல்ல வசதியில்லாததால், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏவை சந்தித்து உதவி கோரினார். இதையடுத்து, தளி பிரகாஷ் எம்எல்ஏ, பிரவீன்குமாருக்கு ₹15 ஆயிரம் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார். அப்போது, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : MLA ,player ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...