வாடிப்பட்டி, டிச. 30: கொடைக்கானலில் நடைபெற்ற அகில இந்திய கராத்தே போட்டியில் பங்கேற்ற வாடிப்பட்டி மாணவர்கள் இந்தோ-மலேசிய உலக அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்தனர்கொடைக்கானலில் சொபுகாய் கொஜீரீயோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாணவர்களுக்கிடையேயான அகில இந்திய கராத்தே போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் வாடிப்பட்டி கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கராத்தே பயிற்சியாளர் காளிதாஸ் தலைமையில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில கராத்தே மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் வாடிப்பட்டையைச் சேர்ந்த சக்திபாலன், பாலஹரிகரன், நாகேந்திர பிரசாத், தர்ஷன்பாலா, ஹாசினி, வெங்கடேஸ்வரி, ஸ்ரீமதி உள்ளிட்ட 7 பேர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றனர். மேலும் இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் உலகளவிலான இந்தோ மலேசியா கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர்.