×

காவேரிப்பட்டணம் அருகே ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி, டிச.30:காவேரிப்பட்டணம் அருகே உள்ள மணிமேடை கொட்டாய் பகுதியில் உள்ள ஆற்றில், நேற்று முன்தினம் மதியம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, அவர் யார்? ஆற்றில் தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : river ,Kaveripatnam ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...