×

ஐவிடிபி நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, டிச.30: கிருஷ்ணகிரியில் ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் ₹5 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில், பர்கூர் புனித சூசையப்பர் சுகாதார மையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், பொதுமக்களுக்கு ₹1.72 லட்சம் மதிப்பில் போர்வைகள், கேக்குகள் மற்றும் பைகள் வழங்கப்பட்டன. இதேபோல், கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும், அத்திமுகம் உண்டு உறைவிடப் பள்ளி இல்ல குழந்தைகளுக்கும், புனித லூயிஸ் மருத்துவமனை பணியாளர்களுக்கும், ₹1 லட்சம் மதிப்பில் கேக் பரிசாக வழங்கப்பட்டன.

வேலூர் தூயமரியன்னை குழந்தைகள் இல்ல மாணவிகளுக்கு,  ₹1 லட்சம் மதிப்பில் கேக் மற்றும் டிராவல் பேக், பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு ₹30 ஆயிரம் மதிப்பில் அறுசுவை விருந்தும், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில், சாலையோர மக்களுக்கு ₹65 மதிப்பில் போர்வைகளும், வாழப்பாடியில் ஏழை மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ₹30 ஆயிரம் மதிப்பிலான போர்வைகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பரிசுகளை ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்கு, ஐவிடிபி நிறுவனம் சார்பில் ₹5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Christmas Celebration ,
× RELATED வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி...