×

நத்தம்-செந்துறை சாலையில் சாலை ஓரங்களில் இரும்பு தடுப்புகள் பணிகள் ஜரூர்

நத்தம், டிச.30: நத்தத்தில் இருந்து செந்துறை சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பெரும்பாலும் மலை அடிவார கிராமங்களான செங்குளம், புதுப்பட்டி, குட்டுப்பட்டி, அய்யனார்புரம், மணக்காட்டூர், பழனிபட்டி, செந்துறை என மலையடிவார கிராமங்கள் அதிகம் உள்ளது. இதன் அருகில் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் வாகனங்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது. மேலும் இச்சாலையின் இருமருங்கிலும் உள்ள ஓரங்களில் பள்ளங்கள், ஓடைகள் மற்றும் பாலங்கள் போன்றவை, விவசாய கிணறுகள் அதிகம் உள்ளது. எனவே இப்பகுதிகளில் வாகனங்களின் பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வாகன போக்குவரத்தின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைப்பது மிக சிறந்தது ஆகும். ஆனால் இவ்வழியாக குட்டுப்பட்டி, மணக்காட்டூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளி வளாகத்திற்கு தடுப்பு சுவர் இல்லாமல் இரவு நேரங்களில் அங்கு சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் பள்ளி வளாகங்களுக்கு சுற்றுச்சுவர் அமைத்து அப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் இன்றி பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,Natham-Senturai ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...