×

ராயம்புரம் கிராமத்தில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை

அரியலூர், டிச.30: அரியலூர் மாவட்டம் ராயம்புரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐயப்பன் சன்னதி, பல்வேறு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஐயப்பன் கோவிலுக்கு தொடர்ந்து 18 ஆண்டுகள் சென்றவர்கள், 36 ஆண்டு சென்றவர் என அனைவரும் இணைந்து மண்டல பூஜை செய்து ஐயப்ப பாடல்களை பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக சந்தனம், மஞ்சள், திரவியம், இளநீர் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் கன்னிபூஜை நடைபெற்றது. அதன்பின் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Mandala Pooja ,Ayyappan ,village ,
× RELATED மாநகராட்சி பூங்காவில் வியாபாரி தற்கொலை