×

தூக்குபோட்டு திருநங்கை தற்கொலை

காலாப்பட்டு, டிச. 30:  கோட்டக்குப்பத்தில் திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரஹமத் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் தமிழ் (19). திருநங்கையாக மாறிய இவர் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளோடு தங்கியிருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் திருநங்கைகள் அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில் தமிழ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது, இரவில் அங்கிருந்த ஒரு புடவையை எடுத்து சீலிங் பேன் கொக்கியில் மாட்டி தூக்கு போட்டுக் கொண்டார். வெளியே சென்ற திருநங்கைகள் நேற்று காலை வந்து பார்த்தபோது, தமிழ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது பாட்டி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டக்குப்பம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை