×

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சேத்தியாத்தோப்பு, டிச. 30: கீரப்பாளையம் ஒன்றியத்தில், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஆயிப்பேட்டை, பரதூர் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.

ஆயிப்பேட்டையில் வாக்குச்சாவடி எண் 22, 23, 24 ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல பரதூர் கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 13,14, 15 ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வாக்குச்சாவடி கடந்த காலங்களில் தேர்தல் நேரத்தில் பதற்றமானவையாக இருந்துள்ள நிலையில், ஆட்சியர் அன்புச்செல்வன், இந்த வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், தாசில்தார் ஹரிதாஸ், பிடிஓ சுப்ரமணியன், சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் அபுஇப்ராஹிம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை