×

மூதாட்டி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, டிச. 30: பூதலூர் அருகே நடக் கமுடியாமல் கஷ்டப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பூதலூர் அருகே ஆவாரம்பட்டி சாதயம்பட்டி பாலமுத்து மனைவி கருப்பாயி (85). இவர் வயோதிகம் காரணமாக நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த இவர் கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதையடுத்து ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை