×

கபிஸ்தலம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டும் அவலம்

பாபநாசம், டிச.30: பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலத்தை சென்றடைய குடமுருட்டி, திருமலைராஜன் ஆறு, அரசாலாறு, காவிரி உள்ளிட்ட பாலங்களை கடந்து செல்ல வேண்டும். பாபநாசத்தில் இருந்து திருவையாறு, சுவாமிமலை செல்ல கபிஸ்தலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ஊரின் காவிரி ஆற்றின் கரையில் குப்பைகள் மட்டுமல்லாது, இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்கள், நடந்து செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே காவிரி ஆற்றின் கரையை மாசுப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kapisthalam River ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...