×

மின்கசிவு காரணமாக பூட்டிய வீட்டுக்குள் பிரிட்ஜ் வெடித்தது

கும்பகோணம், டிச. 30: கும்பகோணம் அருகே மின்கசிவு காரணமாக பூட்டிய வீட்டுக்குள் பிரிட்ஜ் வெடித்தது. கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் திருப்பணிபேட்டை கீழத்தெரு விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது வீட்டை பூட்டி வி்ட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இளங்கோவனின் ஓட்டு வீட்டிலிருந்து புகை வெளிவந்தது. இதுகுறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மாறன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது மின்கசிவு காரணமாக வீட்டிலிருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டுக்குள் சென்று தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீவிபத்தில் மின்சாதன பொருட்கள், குழந்தைகளின் பள்ளி பாடப்புத்தகங்கள், ஆடைகள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : bridge ,house ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...