×

தி.பூண்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளை அச்சுறுத்தும் காலி மது பட்டில்கள்

திருத்துறைப்பூண்டி டிச.30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் சென்னை, திருவாரூர் ஊர்களுக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடம் அருகே அரசு மதுபான கடையால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க குடித்து விட்டு அருகே உள்ள கடைகள் முன்பு, கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் காலில் குத்தி காயமும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்த சொல்வது என்று தெரியாமல் பயணிகள் புலம்பி வருகின்றனர். எனவே புதிய பேருந்து நிலையம் வளாகம் முழுவம் குடித்துவிட்டு வீசி சென்ற காலிமதுபாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : travelers ,Dundee ,bus stand ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி