கடையநல்லூர், டிச.30: கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் வேலம்மாள் தலைமை வகித்தார். இளஞ் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சாம்சங் லாரன்ஸ் வரவேற்றார். ஆய்க்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குரு பிரகாஷ்ராஜா, மனோதினி, சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பாளர் திருமலைக்குமார் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். பின்னர் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.