×

கூடங்குளத்தில் தலைமைத்துவ பயிற்சி முகாம் மேலப்பாவூர் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

பாவூர்சத்திரம், டிச.30:  மத்திய கல்கத்தா அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு நடத்தும், இளையோருக்கான 22 வது தேசிய ஒருமைப்பாடு மற்றும் தலைமைத்துவப் பயிற்சி முகாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர்  அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேர் கலந்து கொண்டனர். இதற்காக பள்ளி மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மாடசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், எஸ்.எம்.சி. தலைவர் சங்கரபாண்டியன், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஆறுமுகம், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் செந்தமிழ் அரசு, ஆசிரியர் மதன்குமார், முகாம் வழிகாட்டி ஆசிரியர் ரகு உட்பட மாணவ மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Tags : Leadership Training Camp ,Koodankulam ,
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...