×

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கூட்டம்

தென்காசி, டிச.30:  தென்காசியில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் தென்காசி வட்டார கிளையின் சார்பில் உலக ஓய்வூதியர் தின கூட்டம் நடந்தது.
மேலகரத்தில் நடந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். துரைராஜ் இறைவணக்கம் பாடினார். கிளை செயலாளர் செல்லப்பா வரவேற்றார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற துணை பொது மேலாளர் செங்கோட்டை கணேசன், ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் வேலாயுதம், கீழப்புலியூர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற தந்தி துணை கோட்ட அதிகாரி சுப்பிரமணியன், புளியங்குடி பால்சாமி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் 85 வயது முடிவடைந்த கிளை தலைவர் பரமசிவனுக்கு கோட்ட பொறியாளர் வேலாயுதம் சால்வை அணிவித்து வாழ்த்தினார். மேலும் 85 வயது நிறைவடைந்த உறுப்பினர்கள் சுடலைமுத்துப்பாண்டியன், சுவாமிநாதன், 80 வயது நிறைவடைந்த உறுப்பினர் வைரவன், வாசு நவநீதகிருஷ்ணன், முத்தம்மாள், 70 வயது நிறைவடைந்த பாலசுப்பிரமணியன், ஆண்டாள், வெள்ளத்தாய், எலிசபெத், பால்சாமி, கணேசன், துரைராஜ், மாரியப்பன், கேரளா எஸ்.கணேசன், இசக்கிசெட்டியார் ஆகியோருக்கு தலைவர் பரமசிவன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

 கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ அலவன்ஸ் மற்றும் மருத்துவ படிகளுக்கான பில்கள் அனுப்பியும் அதற்குண்டான பண பலன்கள் இதுவரை வழங்கவில்லை. இதனை உடனடியாக பி.எஸ்.என்.எல். நிர்வாகம் வழங்க வேண்டும். எனவே இனி வரும் காலங்களில் மத்திய அரசு நடத்தி வரும் மருத்துவமனையில் உறுப்பினராக சேர்ந்து மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கிளை பொருளாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.

Tags : BSNL Pensioners Association Meeting ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி