×

சாத்தான்குளம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சாத்தான்குளம்,  டிச. 30: சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் 1968-69 ஆண்டுகளில் 11ம்வகுப்பு  படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நடந்தது. சாத்தான்குளம் ஆர்எம்பிசிஎஸ்ஐ பிஎஸ்கே ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கல்வியியல் கல்லூரித் தாளாளர்  தலைமை வகித்தார். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரித் தாளாளர் இன்ஜினியர் சசிகரன், கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெப செல்வி  முன்னிலை வகித்தனர்.சாத்தான்குளம் சேகரகுரு பாஸ்கர்அல்பர்ட்ராஜன் ஆரம்ப ஜெபம் செய்தார்.  ராஜ்மோகன் வரவேற்றார். டாக்டர் முருகேசன், மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து பேசினார்.முன்னாள் ஆசிரியர்கள் ஜான்டிதம்பான், கேசரிஜோசப், ஜான் வின்சென்ட் கவுரவிக்கப்பட்டனர். நட்சத்திர அரிமா சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், கனகராஜ், ராஜதுரை, வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் பால்துரை, ஷீபாபாஸ்கர்  பேசினர். ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையாளர் சுப்புராஜ், காந்தரூபன், சவுந்தர்ராஜன், பகவதிபாண்டியன், பால் நினைவுப்பரிசுகள் வழங்கினர். இப்னுசவுத், அருள்ராஜ், ஜெயராமன், தாமஸ் ஸ்டாலின்,சாந்தகுமாரி ,செல்வம் பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
 இதில் முகமது யாகியா, மந்திரராஜ், மனோகரன்,திருவடி, பட்டுராஜ், குணசேகரன், மீனாட்சிசுந்தரம், பிரிட்டோ ஞானம், நயினார், சுந்தர் சிங், ஸ்டீபன் ஞானரா, ஈஸ்வரவடிவு லிங்காலிங்கம், வெங்கடாசலம், கமலிபால் சிங், ஆறுமுகம், பொன்சிங் ராஜா, செல்வின் காபிரியேல், செந்தாமரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜான்சன் நன்றி கூறினார்.

Tags : alumni ,sathankulam school ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...