நாசரேத், டிச. 30: நாசரேத் காமராஜர் பஸ்நிலையம் பின்புறம் இயங்கும் அசெம்பளி ஆப் காட் சபை வளாகத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் ஐக்கிய விருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 2020ம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஐக்கிய விருந்து நடந்தது. தலைமை வகித்த மண்டல போதகர் எட்வின் பிரபாகர், துவக்கிவைத்தார். இதில் போதகர்கள், சபைமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக ஆலயத்தில் நடந்த சிறப்பு ஆராதனையில் போதகர் எட்வின் சிறப்பு செய்தி கொடுத்தார்.