×

ஸ்பிக்நகர் அருகே வெவ்வேறு சம்பவம் மதுவில் விஷம் கலந்து குடித்த இருவர் சாவு

ஸ்பிக்நகர், டிச. 30:   தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ்நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (56). கட்டுமான கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும்  தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
 இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த பால்ராஜ், நேற்று முன்தினம் மாலை  தனது மனைவி, பிள்ளையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் தெரியவந்ததும் அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.   மற்றொரு சம்பவம்: முள்ளக்காட்டில் மதுவில் விஷம் கலந்துகுடித்த கூலி தொழிலாளியும் பரிதாபமாக இறந்தார்.
 முள்ளக்காடு, நேருஜி நகரை சேர்ந்த முத்துராஜ் மகன் பொன்ராஜ் (44). மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளான இவர் தினமும் மதுகுடிப்பதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த பொன்ராஜ், வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பொன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Spiknagar ,incident ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி...