×

தெரு விளக்குகள் எரியாததால் மக்கள் பாதிப்பு

ஊட்டி, டிச. 29:ஊட்டி நகராட்சிக்குட்பட்ட நகர் மற்றும் அனைத்து வார்டுகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் எல்இடி., தெரு விளக்குகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த பழைய தெரு விளக்குகள் அகற்றப்பட்டு புதிதாக இந்த எல்இடி., தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு இந்த தெரு விளக்குகள் திட்டம் துவக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விளக்குகள் பொருத்தப்பட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே எரிகின்றன.
பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்ைல. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சில இடங்களில் தெரு நாய்கள் மற்றும் விலங்குகளின் தொல்லை அதிகம் உள்ள நிலையில், தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 எனவே, நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள் இந்த எல்இடி., தெரு விளக்குகள் எரிவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி