×

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

கூடலூர் டிச. 29: கூடலூர் பந்தலூர் உணவக உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் முகமது சபி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மணி, பொருளாளர் மணி, மற்றும் நிர்வாகிகள் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி மூலப்  பொருட்களுக்கான விலைவாசி உயர்வு காரணமாக உணவுப் பொருட்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயர்த்துவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்க அனைத்து உணவகங்களிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Cuddalore ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...