×

4 ஊராட்சிகளிலும் அடிப்படை வசதி செய்து கொடுப்பேன்

பெ.நா.பாளையம், டிச.29:கோவை குருடம்பாளையம், அசோகபுரம், நாயக்கன்பாளையம், பிளிச்சி ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்  கார்த்திக் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜங்கம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் கார்த்திக் பேசுகையில்,  மாவட்ட கவுன்சிலர் நிதியை வைத்து 4 ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். ஊராட்சிகளில் சீரான குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்று பேசினார். குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும்  சரவணகுமார் பூட்டு சாவி சின்னத்திலும். ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்  வீரபத்திரன் உதய சூரியன் சின்னத்திலும் வீடு வீடாக சென்று வாக்கு  சேகரித்தனர்.
மாவட்ட அவை தலைவர் கணேசமூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர்கள் பத்மாலயா சீனிவாசன், அருள்குமார், பிரபாகரன், சி.டி.சி. ராஜா, ஸ்ரீதர், சக்தி, ஒன்றிய அவைத் தலைவர் து.க.முத்து பொருளாளர் செல்வராஜ், வார்டு செயலாளர்கள் தியாகராஜன். பூபதி, தலைமை கழக பேச்சாளர் உடுமலை தண்டபானி, பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags : facilities ,
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...