×

கணியூர் ஊராட்சியை தொடர்ந்து முதன்மை ஊராட்சியாக மாற்றுவேன்

சோமனூர், டிச.29: கணியூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.செல்வராஜ் நேற்று கணியூர் ஊராட்சியின் ஊஞ்சப்பாளையம், எல்லக்காடு, இந்திராநகர், வேட்டைக்காரன்குட்டை, குமார்நகர், செல்லப்பம்பாளையம், கொள்ளுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பூட்டு சாவி சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்போது அவர் பொதுமக்களிடையே பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் கணியூர் ஊராட்சியில் தலைவராக பொறுப்பேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. மேலும் வருகின்ற காலகட்டங்களிலும் நமது ஊராட்சியில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்வதற்கும், ஊராட்சியை தன்னிறைவுடன் கூடிய முதன்மை ஊராட்சியாக செயல்படுத்துவேன். மேலும் கணியூர் ஊராட்சியில் உள்ள 12வார்டுகளுக்கும் குடிநீர் விஸ்தரிப்பு செய்யவும், சாக்கடை வசதி தெருவிளக்குகள் அமைக்கவும், இலவச வீட்டு மனைபட்டா மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரவும், அரசின் நலத்திட்டங்களை தடையின்றி பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க செய்வேன் என்றார்.

Tags : Ganiyoor ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்