×

ஈரோட்டில் 30, 31ல் மின் நிறுத்தம்

ஈரோடு, டிச. 29:  ஈரோடு பகுதிகளில் நாளை (30ம் தேதி) மற்றும் 31ம் தேதி இரண்டு நாட்கள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
 ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின்பாதையில் உயர் அழுத்த மின் புதைவட கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதனால், நேதாஜி வீதி, ஆர்.கே.வி ரோடு, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, மணிக்கூண்டு, சொக்கநாத வீதி, ஜின்னா வீதி, அக்ரஹார வீதி பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
 ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து திருநகர் காலனி மின் பாதையில் புதை வட மின் கம்பிகள் மின் கம்பங்களில் பொருத்தும் பணி வரும் 31ம் தேதி நடைபெற உள்ளதால், திருவள்ளுவர் குடில், பஸ் ஸ்டாண்ட் பகுதி, வீரபத்திர வீதி, 16 ரோடு, ஈவிகே சம்பத் ரோடு, கேஎன்கே ரோடு, மூலப்பட்டறை, திருநகர் காலனி, ராஜாஜிபுரம், மில் வீதி, காந்திபுரம் 1,2,3 வீதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை ஈரோடு மின்விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Power shutdown ,
× RELATED காணியாளம் பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்