சத்தியமங்கலம், டிச. 29: சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் 2ம் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரம் முடிவடைந்தது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 125 வாக்குச்சாவடிகளும், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் 112 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.