×

மனைவி பிரிந்து செல்ல நீதான் காரணம் எனக்கூறி தந்தையை சரமாரியாக வெட்டிக்கொன்ற மகன்: திருவண்ணாமலை அருகே பயங்கரம்

திருவண்ணாமலை, டிச.29: மனைவி பிரிந்து செல்ல நீதான் காரணம் என்று கூறி தந்தையை சரமாரியாக வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள அரடாப்பட்டு மாரியம்மன் கோயில் ெதருவை சேர்ந்தவர் பெருமாள்(60) விவசாயி. இவரது மனைவி வேடியம்மாள்(55). இவர்களுக்கு முருகன்(40), லட்சுமணன்(38), சேகர்(36) ஆகிய 3 மகன்களும், ஒருமகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

இதில் இளையமகன் சேகரின் மனைவி சத்யா(30) கருத்து வேறுபாடு காரணமாக கெங்கம்பட்டு கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு அனிதா(9), ஹேமலதா(8), குணசுந்தரி(7) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சேகர் தனது தந்தையிடம் `எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு நீதான் காரணம்' என்று சொல்லி அடிக்கடி தகராறு செய்வாராம். அதன்படி வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் சேகர் தனது தந்தை பெருமாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சேகர், தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பெருமாளின் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் பெருமாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்ததும் வெறையூர் ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெருமாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் பதுங்கி இருந்த சேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : break up ,Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...