×

செங்கம் ஒன்றியத்தில் நாளை நடக்கவுள்ள 2வது கட்ட தேர்தலுக்கான வாக்குப் பெட்டி அனுப்பும் பணி தீவிரம்

செங்கம், டிச.29: செங்கம் ஒன்றியத்தில் நாளை நடைபெற உள்ள 2வது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செங்கம் ஒன்றியத்தில் நேற்று மாலையுடன் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஒய்ந்தது. இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

செங்கம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 23 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 44 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு சீட்டு, வாக்கு பெட்டி, மை, பூத் சிலிப் போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, ஒன்றிய தேர்தல் அதிகாரி முருகன், பிடிஓக்கள் சத்தியமூர்த்தி, நிர்மலா, துணை பிடிஓ அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags : phase ,elections ,Sengam Union ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!