×

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரசாரம்

சாத்தூர், டிச. 29: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாவட்டத்தில் முதல் கட்டமாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட 5  ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த 27ம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிவடைந்தது. இரண்டாம் கட்டமாக விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உட்பட  ஐந்து ஒன்றிய பகுதிகளில் வரும் 30ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த மூன்று நாட்களாக தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சாத்தூர் ஒன்றியத்தில் மேட்டமலை, வெங்கடாசலபுரம், படந்தால், மேட்டுப்பட்டி, சத்திரபட்டி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தார்.

அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரசாரத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தில் அமைச்சர் பேசும்போது, ‘ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால்தான் அனைத்து திட்டப்பணிகளும் கிராமங்களுக்கு உடனுக்குடன் வந்தடையும். அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்தமாக பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் வகிக்கிறது. இதைத்தான் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் அரசின் நல்லாட்சி நடைபெற்று வருவதை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் பீடுநடை போட கழக வேட்பாளர்களுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

சாத்தூர் ஒன்றிய  பகுதிகளில் அதிமுக ஆட்சியில்தான் தாமிரபரணி குடிநீர் கொண்டு வரப்பட்டது. தற்போது ஒன்றியப் பகுதி முழுவதிலும் தாமிரபரணி தண்ணீர் இன்னும் சில தினங்களில்  வழங்கப்படும். மேலும் பல்வேறு திட்டங்களை இந்த பகுதியில் செயல்படுத்த உள்ளோம். பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கும் அரசு அதிமுக அரசு. எல்லாத் திட்டங்களும் ஏழை எளிய மக்களுக்கு எளிய முறையில் கிடைக்கும் வகையில் ஆளும் கட்சி சிறப்பாக செய்து வருகிறது. வாக்காளர்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags : KD Rajendrapalaji ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...