×

டிஆர்இயு நிர்வாகிகள் தேர்வு

மதுரை, டிச.29:  தெட்சிணரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) மகாசபைக் கூட்டம்  மதுரையில் நேற்று நடந்தது. கோட்டத் தலைவர் எஸ்.பவுலின் தலைமை வகித்தார். மத்திய சங்க துணைத் தலைவர் இளங்கோ சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில்புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோட்டத் தலைவராக எஸ்.பவுலின், கோட்டச்  செயலாளராக ஆர்.சங்கரநாராயணன், கோட்டப் பொருளாளராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் உதவிக்  கோட்டத் தலைவர்களாக எஸ்.ஜேகப், பி. கணேசன், என்.கார்த்திக், சங்கிலி,  சுதர்சன் ஆகியோரும், உதவிக் கோட்டச் செயலாளர்களாக எம்.ஜோசப் அமல்ராஜ், கே.ராஜூ,  எம்.சி. ஆன்டரன், பி.சரவணன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : TREU Administrators ,
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...