×

பிறந்த சில மணிநேரத்தில் சாலையில் வீசப்பட்ட குழந்தை கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல், டிச. 29: கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் மேல்பள்ளம் என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. இதனருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சாலையோரத்தில் இருந்த ஒரு கட்டப்பையில் பிறந்து சில மணிநேரமான ஆண்குழந்தையை யாரோ வீசி சென்று விட்டனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் கொடைக்கானல் வட்டார சுகாதார அலுவலர் சந்தோஷ் கந்தையா உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையை வீசி சென்றவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு பின் ஆண் குழந்தை திண்டுக்கல் காந்திகிராமம் கஸ்தூரிபா குழந்தைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : baby ,road ,birth ,
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...