×

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் திமுக, கூட்டணியினருக்கு தீவிர வாக்குசேகரிப்பு

ஒட்டன்சத்திரம், டிச. 29: ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் நாளை (டிச.30) ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெறவுள்ளது. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அர.சக்கரபாணி எம்எல்ஏ, வேலுச்சாமி எம்பி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அத்திக்கோம்பை, லெக்கையன்கோட்டை, வெரியப்பூர், வலையபட்டி, வடகாடு, கண்ணனூர், பெத்தேல்புரம், பால்கடை ஆகிய பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சகுந்தலா, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குபோட்டியிடும் தங்கராஜ், ராமராஜ், தனலட்சுமி, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பத்மாவதி, சந்திரசாமி, தனலட்சுமி ஆகியோருக்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் இளவழகன், தண்டபாணி, வைஸ் ராமசாமி, பொன்முருகன், சுப்பிரமணி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : voting ,allies ,DMK ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...