×

திருவெறும்பூர் பகுதியில் மதுபானம் விற்ற 5 பேர் கைது

திருவெறும்பூர், டிச.29: திருவெறும்பூர் போலீசார் பத்தாளப்பேட்டை கிளியூர் சாலையில் ரோந்து பணி சென்றனர். அப்போது மேகளத்தூர் கடம்பங்குடியை சேர்ந்த சுதர்சன் (35), அதே பகுதியை சேர்ந்த உபகார தாஸ் (26) ஆகியோர் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த போது கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் மதுபானம் விற்ற கக்கன் காலனி சேர்ந்த பரணி (43), அதே பகுதியை சேர்ந்த சிவஞானம் (67) ஆகியோர் மதுபானம் விற்றுக்கொண்டிருந்தபோது கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவெறும்பூர் அருகே காட்டூரை சேர்ந்த அர்ஜுன் (28) என்பவர் காட்டூர் கடைவீதியில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தபோது கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரிடமும் திருவெறும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : area ,Thiruverumbur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...