×

நாளை விருப்ப மனு பெறப்படும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிடன் போட்டியிட்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதற்கு பாஜவின் அமித்ஷா, இந்தி மொழியை தொடர்ந்து புகழ்வதும், தமிழகத்துக்கு எதிரான பல்வேறு பாஜ நடவடிக்கைகளை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்காததாலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக தலைவர் ஜி.ேக.மணி தெரிவித்துள்ளர்.தமிழக சட்டப்பேரவை ேதர்தலில் அதிமுக, பாஜவுடன் இணைந்து பாமக போட்டியிட்டது. இதில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. மேலும் முதல்முறையாக பாஜ 4 தொகுதிகளில் வெற்றி ெபற்றது. தேர்தலில் பாஜவுக்கு அதிமுக முக்கியம் கொடுத்ததால் தான், அதற்கு 4 இடங்களில் வெற்றி பெற்றதாக, பாமகவின்2 ம் கட்ட தலைவர்கள் வெளிப்படையாக கூறி வந்தனர்.மேலும், பெட்ரோல் விலை உயர்வு, நீட் மற்றும் மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படுவது, இடஒதுக்கீடு போன்றவற்றில் பாமகவின் கொள்கைக்கு எதிராகவே பாஜ சமீபகாலமாக செயல்பட்டு வருவதாக பாமக தொண்டர்கள் கொந்தளித்து வந்தனர். மேலும், பாஜ கூட்டணியில் தான் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் நாம் தோற்றோம் என்று வெளிப்டையாகவே பாமக தொண்டர்கள் மேலிடத்துக்கு தெரிவித்தனர். மேலும், செம்மொழியான தமிழுக்கு முக்கியத்துவத்தை குறைப்பது, கீழடி அகழ்வாழ்வு குளறுபடிகள், மற்றும் அமித்ஷாவின் இந்தி ஆதரவு பேச்சுகள் பாமக தலைவர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இந்தி மொழி ெதாடர்பாக அமித்ஷாவுக்கு எதிராக பாமக நிறுவனர் நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார்.இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று  மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றது.அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை இராமதாஸ், அன்புமணி  ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் ( செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் நாட்கள்) விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது….

The post நாளை விருப்ப மனு பெறப்படும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : local ,B.M.K. ,G.K. Hour ,CHENNAI ,Bamako ,AIADMK ,BJP ,District Rural Local Government Elections ,B.A.M.K. ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு