×

துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிரம் புதுக்கோட்டை அருகே பால் வாங்க கடைக்கு சென்ற பெண்ணுக்கு சரமாரி கத்திகுத்து

புதுக்கோட்டை, டிச.29: புதுக்கோட்டைஅருகே கீரமங்கலத்தில் நேற்று காலை பால் வாங்க கடைக்கு நடந்து சென்ற பெண்ணை பைக்கில் வந்த வாலிபர் கத்தியால் சரமாரி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் காசிம் புதுப்பேட்டையை சேர்ந்த இர்ஷாத் என்பவரது மனைவி ரேணுபீவி(30). இவர் நேற்று காலை பால் வாங்க அப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென ரேணுபீவி அருகே வந்து கத்தியால் அவரை சரமாரி குத்தினார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் திரண்டு வந்ததால் அந்த நபர் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ரேணுபீவியின் உறவினர்கள், பொதுமக்கள் படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவலறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மர்ம நபர் விட்டு சென்ற பைக்கை கைப்பற்றினர். ரேணுபீவி தாலிசெயின் உள்ளிட்ட தங்க நகைகள் அணிந்திருந்தார்.
ஆனால் அவை அறுக்கப்படவில்லை. இதனால் நகைக்காக இந்த சம்பவம் நடக்கவில்லை என போலீசார் கருதுகின்றனர். மேலும் வழக்கு பதிந்து பைக்கின் உரிமையாளர் யார், ரேணுபீவியை எதற்காக கத்தியால் குத்தினார்.

Tags : gunman ,shop ,Pudukkottai ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...