×

புஷ்பவனம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம், டிச.29: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் சண்முகம். வேட்பாளர் சண்முகம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சண்முகத்திற்கு ஆதரவாக ஏராளமான பெண்கள் வார்டு வாரியாக வாக்கு சேகரித்தனர். கிராமத்தின் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி, வடிகால் வசதி, நீர்நிலை அமைத்து மழைநீர் சேகரிப்பு கூரை வீடுகளுக்கு பதில் அரசு திட்டங்கள் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் மேலும், கால்நடை மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரப்படும் எனக்கூறி வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்கும் போது நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் உடன் சென்றனர்.

Tags : Shanmugam ,panchayat chief ,Pushpavanam ,
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...