×

மீனவருக்கு கத்திகுத்து

புதுச்சேரி,  டிச. 29:  புதுவை, அரியாங்குப்பம், பர்கத் நகரில் வசிப்பவர் ஆனந்த் (33),  மீனவர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பார்ட்டி நிகழ்ச்சிக்கு  சென்றுள்ளார். அப்போது மாஜி நண்பரான வீராம்பட்டினம் ஜெயசீலன் என்ற  சிவக்குமார் (32) அங்கு இருந்த நிலையில் 2 பேருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த ஜெயசீலன், ஆனந்தை கத்தியால் குத்தி  கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின்பேரில்  அரியாங்குப்பம் போலீசார், ஜெயசீலன் மீது வழக்கு பதிந்து அவரை தேடி  வருகின்றனர்.

Tags : fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...