×

ஏரியில் மூழ்கி சகோதரிகள் சாவு

சங்கராபுரம், டிச. 29:  சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகள் அபிராமி(13). சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை திவ்யா(10) சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். விடுமுறை தினமான நேற்று மதியம் 2 மணியளவில் இருவரும் மூக்கனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குழந்தைகள் வெளியே சென்று நீண்ட ேநரம் ஆனதால், சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர்களை தேடினர். கிடைக்கவில்லை. இதையடுத்து, ஏரி பகுதிக்கு சென்று தேடி உள்ளனர். அப்போது, அங்கு ஏரிக்கரையில் குழந்தைகளின் துணிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊர் பொதுமக்கள் ஏரியினுள் குதித்து குழந்தைகளை தேடினர். அப்போது, இருவரையும் மீட்டனர். பின்னர் அருகில் உள்ள புதுப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Tags : Sisters ,lake ,
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!