×

ஆத்தூரில் கழிவுநீரோடையில் விழுந்து எலக்ட்ரீசியன் பரிதாப பலி

ஆறுமுகநேரி, டிச. 29:  ஆத்தூரில் கழிவுநீரோடையில் தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகநேரி அடுத்த ஆத்தூர் அருகேயுள்ள  செல்வன்புதியனூரைச் சேர்ந்த கோபால் மகன் சிவக்குமார் (37). எலக்ட்ரீசியன். இவருக்கும், சுப்புலட்சுமி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான சிவக்குமார், நேற்று மாலை 4.30 மணியளவில் ஆத்தூர் முஸ்லிம் தெரு அருகே கழிவுநீரோடை பாலத்தின் மேல் அமர்ந்தபடி மது குடித்துகொண்டிருந்தார். இதில் போதை அதிகமானதால் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் ஓடையில் தலைகீழாக விழுந்தார். இதில் ஓடையில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.  தகவலறிந்து விரைந்து வந்த ஆத்தூர் போலீசார், உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் . மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Athur ,
× RELATED டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்