×

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

மானூர், டிச.29: மானூர் அடுத்த ரஸ்தா அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் தேசிங்குராஜா(27). இவர் நேற்று மானூர்-எட்டாங்குளம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த இருவர் தேசிங்குராஜாவிடம் தகராறு செய்து அவரை வெட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் எஸ்ஐ கணேஷ்குமார் வழக்குப்பதிந்து வெட்டியவர்களை தேடி வருகிறார்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது