குமாரபாளையம், டிச.29: குமாரபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தில் லட்சார்ச்னை விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் தலைமை தாக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் விழாவை துவக்கி வைத்தார். குருசாமி எம்ஜிஆர் நகர் ஈஸ்வரன், தஞ்சை ராமகிருஷ்ணா விவேகானந்தா சேவா ஆஸ்ரமத்தின் தலைவர் கிருஷ்ணானந்த மகராஜ் ஆகியோர் நடத்தினர். திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்யா, தாசில்தார் தங்கம், துணை தாசில்தார் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.