பள்ளிபாளையம், டிச.29: தமாகா தலைவர் ஜிகே வாசன் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் மற்றும் ரொட்டிகள் வழங்கப்பட்டது. தமாகா தலைவர் வாசன் பிறந்தநாள் விழா, பள்ளிபாளையத்தில் கொண்டாடப்பட்டது. நகர தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார், செயலாளர் சையத்காசிம் ஆகியோர் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி வைத்தனர். பின்னர், அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்கப்பட்டது. நிகழச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், குமாரபாளையம் நகர தலைவர் தனபால், செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.