×

திறந்த நிலையில் உள்ள செப்டிக் டேங்க்கால் சுகாதார சீர்கேடு

தர்மபுரி, டிச.29: பழைய தர்மபுரியில் இலவச கழிவறையின் செப்டிக் டேங்க் திறந்த நிலையில் உள்ளதால், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
 தர்மபுரி அருகே பழைய தர்மபுரியில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இலவச கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் முன்புறம் உள்ள செப்டிக் டேங்க் மூடியை, துப்புரவு பணியாளர்கள் திறந்து வைத்துள்ளனர். இதனால் கழிவறைக்கு செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்க் உள்ளே விழும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதார சீர்கேடு அபாயமும் நிலவுகிறது. எனவே, ஆபத்தை வரவழைக்கும் வகையில் உள்ள செப்டிக் டேங்க்கை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா